Posts

Showing posts from September, 2020

விதைகளும் அவை தரும் பலன்களும்

Image
  நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த  விதைகளும் அவை தரும் பலன்களும்! பழங்களாக இருந்தாலும் காய்களாக இருந்தாலும் அதன் உள்ளே விதை இருந்தால் அதை அப்புறப்படுத்திவிடுவது தான் வழக்கம். ஆனால் இப்படி தூக்கியெறியப்படும் விதைகளின் மருத்துவகுணங்கள் தெரிந்தால் இனி அதை வீணடிக்கமாட்டோம். இனிப்பும் சுவையும் கொண்டவை மட்டும் தான் சாப்பிடத்தகுந்தவை என்ற எண்ணத்தால் தான் பாரம்பரியமாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய உணவு முறையை மறந்திருக்கிறோம். மருத்துவத்துறையில் விதைகள் என்பது முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. உடலில் நோய்தாக்காமல் தடுக்ககூடிய தன்மையும் இதற்கு உண்டு. நோய் தீர்க்கும் வல்லமையும் இதற்கு உண்டு. பொதுவாக விதைகள் தாவர வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விதைகள் ஒவ்வொன்றும் முளைக்கும் போதே எண்ணற்ற ஊட்டச்சத்துகள் விதைகளிலேயே சேமிப்பு பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இது உணவுபொருளாகவோ, வேதிப்பொருளாகவோ இருக்கும் தன்மைக்கேற்ப மருத்துவத்தில் மருந்து பொருளாக பயன்படுகிறது. சர்க்கரை பொருள்கள், கொழுப்பு எண்ணெய், புரதங்கள் என விதைகளில் இருக்கும் பொருள்களின் தன்மை குறித்தே இதன் மருத்துவக்க...

மாதுளம்பழம்

Image
 *பிரமிக்கவைக்கும் மாதுளை!* பழங்களிலேயே பழமையானது, சிறந்தது மாதுளம்பழம்தான். உலகெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன. நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்துவிடும். மருத்துவக் குணங்களும் அழகை அள்ளித்தரும் குணங்களையும் கொண்டது பிளேக், புற்றுநோய் போன்றவற்றைக் குணமாக்கும் மகத்துவத்தை உடையது.  மாதுளை தரும் 14 பிரமாதப் பலன்கள் 1. உடலில் நைட்ரிக் ஆக்சைட் (Nitric Oxide) என்னும் தனிமம் குறையும்போது, மனஅழுத்தம் ஏற்படும். மாதுளை, நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும் தன்மைகொண்டது. இதைச் சாப்பிட்டால், மனஅழுத்தம் குறையும். 2. உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான  ஆற்றல் கிடைக்கும். 3. மாதுளையில் உள்ள `எல்லஜிக் அமிலம்’ (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும். 4. மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை. மாதுளம் பழத்தைச் சாப்...

செம்பருத்தி

Image
செம்பருத்தி – மருத்துவ பயன்கள் சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் குருதி பெருக்கிற்கு பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும். செம்பருத்தி பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும். நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி நஞ்சுகளை வெளியேற்றும். இனப்பெருக்க  உறுப்பு நோய்களுக்கும் இது மருந்தாகின்றது. செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு,  பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும். உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும். செம்பருத்தி பூக்க...

சாமை

Image
இரும்புச்சத்து அதிகம் நிறைந்த சாமை. இன்று, 25 வயதில் இதய நோய், 30 வயதில் மூட்டுவலி என அனைவருமே ஏதேனும் ஒரு நோயைச் சுமந்து, மருந்துகளையே உணவாக உட்கொள்கிறோம். உணவின் தேவை அதிகரித்து வரும் நிலையில், பாரம்பரிய விவசாய முறை என்பது படுபாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. விளைநிலங்களைப் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் ஆக்கிரமித்து விட்டன. சிறுதானிய உணவுப் பொருட்கள், நம் உடலுக்கு ஊட்டத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தருவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும், சாமையில் தான் இரும்புச்சத்து அதிகம். ரத்தசோகை வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். தாதுப்பொருட்களை உடலில் அதிகரிகக்ச் செய்து, உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும். இதில், கலோரி அளவு மிகக்குறைவு. ஆனால், ஊட்டச்சத்துக்கள் மிக அதிகம். புரதமும் இதில் இருக்கிறது. அதிகம் சேர்த்துக் கொண்டாலும் ஆபத்து இல்லை. இப்போது கடினமான மேல் தோல் நீக்கிய சாமை கிடைக்கிறது. இதை உபயோகிக்கும் போது தோல் நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அரிசியைப் போலவே பல உணவுகளை சமைக்க சுலபமாகப் பயன்படுத்த முடியும். வாங்கும் போது பார்த்தாலே இ...

நெருஞ்சில்

Image
நெருஞ்சியின் அளப்பரிய பயன்கள்..! நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்த சிறு கொடிகள் சிறுநீர் தாரை நோய்கள் அத்தனையும் நீக்கும் குணம் வாய்ந்தது.  மேலும் இது ஒரு ஆகர்ஷண மூலிகையாகும். இது சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் பெருநெருஞ்சில் (யானை நெருஞ்சில்) என 3 வகைப்படும். கொடியின் இலை, வேர்,காய், பூ, தண்டு, மற்றும் முள் என அனைத்தும்.பயன்தரும் . நெருஞ்சில் மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து காணப்படும். இது ஒரு முட்செடி., சிறு சிறு முற்கள் உண்டு. . இந்தியாவில் எங்கும் பரவலாகக் காணப்படுகிறது. தமிழகமெங்கும் சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் காணலாம். மஞ்சள் நிற மலர்களையுடையது. மலர்கள் சூரிய திசையோடு திரும்பும் தன்மையுடையன. இதன் காய் முற்றிக் காய்வதால் முள்ளுடன் இருக்கும். இதன் பெரு நெருஞ்சிலை யானைவணங்கி என்பர். பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும். இதன் இலையை ஒரு குவளை தண்ணீரில் சிறிது நேரம் இட்டால் ,தண்ணீர் அடர்த்தி மிகுந்துகெட்டியாகிவிடும் . பார்ப்பதற்கு அதிச...

பிரண்டை

Image
பிரண்டை  பிரண்டையின் சிறப்பு அம்சமே எலும்பு சார்ந்த பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணமாக இருப்பது தான். எலும்பு தேய்மானம் பிரச்சனை கொண்டவர்கள் பிரண்டை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும்  நல்லது.  எலும்பு முறிவால் அவதிப்படுபவர்கள் பிரண்டையை வாரம் மூன்று முறை துவையலாகவோ, சட்னியாகவோ உணவுடன் சேர்ந்து சாப்பிட உடைந்த எலும்புகள் வேகமாக கூடும். பிரண்டை எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க வல்லதும், கொழுப்பை குறைக்க கூடியதுமான பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. கொழுப்பு சத்தை கரைப்பதுடன் ஒவ்வாமைக்கு மருந்தாகிறது. எலும்பு  பலம் பிரண்டை வேரை உலர்த்து பொடி செய்து 1 கிராம் அளவாக காலை, மாலை கொடுத்து வர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும்.  நரம்பு  பலம் பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை  நரம்புகளும் பலப்படும். ரத்த மூல ம் பிரண்டை துண்டுகள், மிளகு பொடி, சுக்கு பொடி, நெய். பிரண்டையின் நாரை நீக்கிவிட்டு சதை...

நச்சு நீக்கி

Image
                                                    வெல்லம் நல்லது... ஏன் தெரியுமா? இரவும் உணவு உண்ட பின் ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுவதால் செரிமான சக்தி அதிகரிக்கும். சர்க்கரை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு வரை நம் உணவில் வெல்லம்தான் மிக முக்கிய இனிப்புப் பொருளாக பயன்படுத்தப்பட்டது. வெயில் நாட்களில் கூட வெல்லத்தை தண்ணீரில் கரைத்து அதோடு கொஞ்சம் ஏலக்காய் தட்டிப்போட்டு மணக்க மணக்க குடிப்பார்கள். ஏன் தெரியுமா..? செரிமானத்திற்கு நல்லது :  இரவும் உணவு உண்ட பின் ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுவதால் செரிமாண சக்தி அதிகரிக்கும். அதுமட்டுமன்றி நம் விருந்து பழக்கத்திலும் இலையில் முதலில் கொஞ்சம் வெல்லம் வைப்பார்கள். சாப்பிட்ட விருந்து உணவு செரிமானம் அடையவே இறுதியாக சாப்பிடவே அந்த வெல்லம் வைக்கிறார்கள். மற்ற நேரங்களில் குடிக்கும் தண்ணீரிலும் ஒரு கட்டி வெல்லம் கலந்து குடித்தாலும் செரிமானத்திற்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும் :  வெல்லம் உடலை ...

இயற்கையின் வயகரா

Image
 Moringa *What are the Benefits?* Moringa is incredibly nutritious, packed with vitamins and minerals, including iron, riboflavin, magnesium, and vitamins A, B6, and C. It’s also rich in antioxidants, which may protect your cells against free radicals, which may contribute to cancer, heart disease, and other health problems and chronic illnesses. *Great For Skin & Hair* Moringa is full of vitamin A, which is one of the best vitamins for the skin. It can be found in lots of skincare products, and when applied to the skin, it can help breakouts, hyperpigmentation, and even fine lines and wrinkles. It’s also full of calcium and protein, which are great for your skin, hair, nails, and even your bones. *May Help Lower Blood Sugar * High blood sugar can contribute to diabetes, as well as heart disease. While most of the evidence is from animal studies, moringa has shown to potentially help maintain healthy blood sugar. However, in several small studies in humans, taking moringa helpe...

இயற்கை மருத்துவம்

Image
விளாம்பழம் விளாம்பழம் மருத்துவ குணங்கள்:  காய்ச்சல், இருமல், சளி பிரச்னைகளை போக்க கூடியதும், வயிற்று கோளாறுகளை சரி செய்யும் தன்மை கொண்டதும், வாயு பிரச்னையை குணப்படுத்த கூடியதுமான விளாம்பழத்தின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது விளாம் பழம். இதை, யானைகள் விரும்பி சாப்பிடும். விளாம்மரத்தின் பட்டை, இலை, பழம் உள்ளிட்டவை பயனுள்ளதாக விளங்குகிறது. விளாம் மரத்தின் பட்டையை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளாமரப்பட்டை, அரிசி திப்லி, தேன். விளாமரத்தின் பட்டை 5 கிராம் அளவுக்கு எடுக்கவும். இதனுடன், 5 அரிசி திப்லி சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி, சிறிது தேன் சேர்த்து தினமும் 100 மில்லி வரை காலை, மாலை குடித்துவர காய்ச்சல், இருமல், சளி, ஆஸ்துமா, விக்கல் ஆகியவை குணமாகிறது.  விளாம் மரத்தின் இலையை பயன்படுத்தி வாயு பிரச்னை, வயிறு உப்புசத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளாமர இலைகள், பனங்கற்கண்டு, பால். விளாம் மரத்தின் இலைகள் ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு ...