Posts

Showing posts from October, 2020

உளுந்து

Image
உளுந்து       உளுந்து - மருத்துவப் பயன்கள் நோயின் பாதிப்பு நீங்க: கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும். இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது. உடல் சூடு தணிய: இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது. உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். தாது விருத்தியாக: உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும். உளுந்து வடை: உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலு...

மாதுளை இலை

Image
                                                                                       மாதுளை இலை மாதுளை இலையின் மருத்துவ பயன்கள் ◆காது வலியால் அவதிப்படுபவர்கள் மாதுளை இலைகளை நன்கு கழுவி கடுகு சேர்த்து அரைத்து சாற்றை வலி இருக்கும் காதில் சில துளிகள் விடவும். காது வலி மாயமாக மறைந்திடும். ◆சீரான செரிமான செயலிற்கு மாதுளை இலை மிகவும் உதவக்கூடியவை. வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவராக இருந்தால், மாதுளை இலைகளை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் செரிமானத்தை சீராக்கி, உடலுக்கு தேவையான ஆற்றவை வழங்கிடுகிறது. மேலும், வயிற்று போக்கு, அஜீரண கோளாறையும் நீக்கிடுகிறது. ◆மாதுளை இலைகளால் செய்யப்பட்ட மாத்திரை உள்ளிட்ட பிற மருந்துகளையும் நீங்கள் உட்கொள்ளலாம். வயிற்றுபோக்கால் அவதிப்படுபவர்கள் மா...

கடுக்காய்

Image
 *கடுக்காய்*  *26  நோய்களுக்கு தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்!*  தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க சார்) சித்த மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பக்கவிளைவுகளோ அல்லது பின் விளைவுகளோ கிடையாது.  அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்லமை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க விருக்கிறோம். கடுக்காயால் குணமாகும் நோய்களை முதலில் பார்ப்போம் 1. கண் பார்வைக் கோளாறுகள் 2. காது கேளாமை 3. சுவையின்மை 4. பித்த நோய்கள் 5. வாய்ப்புண் 6. நாக்குப்புண் 7. மூக்குப்புண் 8. தொண்டைப்புண் 9. இரைப்பைப்புண் 10. குடற்புண் 11. ஆசனப்புண் 12. அக்கி, தேமல், படை 13. பிற தோல் நோய்கள் 14. உடல் உஷ்ணம் 15. வெள்ளைப்படுதல் 16. மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண் 17. மூத்திர எரிச்சல், கல்லடைப்பு 18. சதையடைப்பு, நீரடைப்பு 19. பாத எரிச்சல், மூல எரிச்சல் 20. உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், பௌத்திரக் கட்டி 21. ரத்தபேதி 22. சர்க்கரை நோய், இதய நோய் 23. மூட்டு வலி, உடல் பலவீனம் 24. உடல் பருமன் 25. ரத்தக...

திப்பிலி

Image
திப்பிலி  *திப்பிலி!  திரிகடுகு எனும் மூலிகை மும்மூர்த்திகளில் மூன்றாமவர்*  சுக்கையும் மிளகையும் அறிந்த அளவுக்கு, இந்தத் தலைமுறை திப்பிலியை அறிந்திருக்கவில்லை. மிளகைப் போன்றே மிக முக்கிய மருத்துவக் குணம் உடையது இது.  *“கட்டி எதிர்நின்ற கடும் நோயெல்லாம் பணியும்”*  என தேரன் சித்தர் சிலாகித்துப் பாடிய இந்த திப்பிலி, சாதாரண சளி, இருமல் முதல் இளைப்பு நோய் வரை குணப்படுத்தும். இளைப்புநோய் என்பது குழந்தைகளை எடை குன்றச்செய்து, காயச்சலும் சளியுமாய் இருக்கச்செய்யும் இளங்காசம் எனும் பிரைமரி காம்ப்ளக்ஸ் தான். *‘‘மாமனுக்கு மாமனென மற்றவனுக்கு மற்றவனாக  காமனெனுந் திப்பிலிக்குக் கை”*  என தேரன்சித்தன் பாடியதை விரித்தால், விளங்கும் விஷயம் அலாதி. பாரதத்தில் சகுனி மாமனால் வந்த பிரச்னையை, கிருஷ்ண மாமான் தீர்த்துவைத்தது போல், ஆஸ்துமா நோய் மாமன் போல் மரபாய் வந்திருந்தாலும், மற்றவனாய் சொல்லப்பட்ட கோழையை விரட்டி, ஆஸ்துமாவை விரட்டும் என்பதுதான் அப்பாடலின் பொருள். திப்பிலிக்கு சித்த மருத்துவத்தில் காமன் என்று இன்னொரு பெயர் உண்டு. பித்தம் தாழ்ந்து இருக்கும் ஆஸ்துமாவில், பித்தத்தை ...

50 நோய்க்கு மருந்து

Image
  *50  நோய் க்கு   இயற்கை மருத்துவம் * *சளி, இருமல் நீங்க* திப்பிலி, அக்கரா, சுக்கு, மிளகு, மஞ்சள். இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து தினமும் காலை அல்லது இரவில் அரை டீஸ்பூன் எடுத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குறையும். வென்னீரிலும் கலந்து சாப்பிடலாம். *உடலில் புளிப்பு அதிகம் இருப்பின்* இஞ்சி, வெற்றிலை, பூண்டு, மல்லி. இதை நன்றாக அம்மியில் வைத்து அரைத்து வென்னீரில் அந்த சாறை பிழிந்து மாலை அருந்தினால் உடலில் உள்ள புளிப்பு குறையும். *வாயு மருந்து* பூண்டு, ஓமம், மஞ்சள், சுக்கு, கருஞ்சீரகம், வாவளங்காய். இதை சட்டியில் போட்டு அவித்து சாறை வடிகட்டி குடிக்கவும். *பித்தம் அதிகம் இருப்பின்* இஞ்சி, சர்க்கரை, கொட்டை முந்திரி, ஏலக்காய் அரிசி, மல்லி. இதை அம்மியில் அரைத்து வைத்து சட்னியைப் போல் சாப்பிட்டால் பித்தம் குறையும். அல்லது அவித்தும் குடிக்கலாம். *குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு நிற்க* சுக்கு, பூண்டு, வாவளங்காய், பெருங்காயம், இந்துப்பூ, ஓமம். இந்த மருந்துகளை அம்மியில் அரைத்து துணியில் வைத்து வெந்நீ:ரில் பிழிந்து எ...

வில்வம்

Image
வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்..! தேவலோகத்தைச் சேர்ந்த ஐந்து தெய்வீக விருட்சங்களில் ஒன்று வில்வம். பாதிரி, வன்னி, மா, மந்தாரை ஆகிய ஐந்து விருட்சங்களைப் பஞ்ச விருட்சங்கள் என்று போற்றுகின்றன புராணங்கள்.  இந்த ஐந்து மரங்களில் ஒன்றான வில்வத்தை நாம் தொட்டாலே, அது நம்மைப் புனிதப்படுத்தும் தன்மை கொண்டது. இதை ஸ்பரிசித்து உட்கொண்டாலே மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. வில்வம் சிவபெருமானின் அம்சம் என்பது மட்டுமல்ல, முருகனுக்கும் மிகவும் பிரியமானது. முருகனின் அர்ச்சனை நாமங்களில், 'வில்வ பிரியா' என்பதும் ஒன்று. பெரும்பாலான சிவாலயங்களில் வில்வ விருட்சமே தலவிருட்சமாக அமைந்திருக்கிறது. ஒரே ஒரு வில்வ இலையை எடுத்து பக்தி சிரத்தையுடன் உட்கொள்ள, பிறவியின் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும். திரிதளஞ்ச; திரிகுணாகாரம்; திரிநேத்ரஞ்ச; திரியாயுதம்; திரிஜன்ம பாப சம்ஹாரம் ஏக பில்வம் சிவார்ப்பணம் என்ற மந்திரத்தை உச்சரித்து உண்பது பெரியோர்களின் வழக்கம். வில்வத்தின் விஞ்ஞான குணம்: ஒரு தேவதையைப் போல் அதீத சக்திகள் வாய்ந்தது இந்த மரம். வில்வ இலைகளில் சுழலும் எலெக்ட்ரான், தீட்சண்யமான அதிர்வலை...

வெற்றிலை

Image
                                                                               வெற்றிலை வெற்றிலைக்குள் புதைந்திருக்கும் மருத்துவ குணங்கள்...!!! வெற்றிலை போடுவது ஒரு அநாகரீகச்செயல் என்றும், பழுப்பு நிறப் பற்களைப் பார்த்து கேலி செய்வதும் வழக்கமாக உள்ளது.  உண்மையில் வெற்றிலைபோடுவது ஒரு நல்ல பழக்கம் ஆகும். அது அருவெருக்கத்தக்கதாகவும், அபாயகரமானதாகவும் ஆனது, அதை நாம் கையாண்ட விதத்தினால் தான்!  அளவுக்கு மீறினால் அமுதமும் விஷமாகும்; (அளவோடு குடித்தாலும் கோலாக்கள் கடும் விஷமாகும்) அதுவும் நல்லது என்று ஒரு பழக்கத்தை ஆரம்பித்தால், அதை கேடு விளைவிக்கக் கூடியதாக மாற்றுவது நமக்குக் கைவந்த கலை!! மருத்துவரைக் கேளுங்கள்: “வெற்றிலை போடாதீர்கள்! அது கெடுதல் தரும் கேன்சரைக் கொண்டு வரும்” என்பார். கிறிஸ்தவத்தை தனது மதமாகக் கொண்ட ஆங்கிலேயனாகட்டும்; அவன் இந்தியாவில் ப...