இயற்கையின் அதிசயம்
காயகற்ப மூலிகை - ஆடாதோடை
"ஆயுள் மூலிகை"
மனிதர்களின் உடலில், எந்த வித வியாதிகளும் அணுகாமல், நரை, திரை மற்றும் மூப்பு போன்ற உடல்பிணிகளால் பாதிப்பு அடையாமல், பன்னெடுங்காலம் ஆரோக்கியமாக வாழ வழிசெய்யும் மூலிகைகளே, காயகற்ப மூலிகைகள் ஆகும்.நீண்ட மாவிலை போல பசுமையான இலைகளைக்கொண்ட ஆடாதோடை, வெள்ளை நிறத்தில் பூக்களுடன் விளங்கும். அற்புத மூலிகை. ஆடாதோடை வளருமிடத்தில், அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி, ஆக்சிஜனை பெருமளவில் வெளியிட்டு, மனிதர்களின் நல்வாழ்வுக்கு துணை செய்யும் தன்மையுடையதாகையால், ஆடாதோடையை "ஆயுள் மூலிகை" என அழைப்பர்..மனிதர்களின் நோயணுகா வாழ்வுக்கு நல்ல சுவாசமே, தீர்வாகும். நல்ல சுவாசத்திற்கு, நுரையீரலின் செயல்பாடு இன்றியமையாததாகும். நுரையீரல் என்பது மனிதனின் சுவாசம் மூலம் வரும் காற்றிலிருந்து, ஆக்சிஜனை பிரித்து உடலில் பரவவைத்து, கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றும். சீராக இயங்கும் நுரையீரலே, இரத்தத்தை சுத்திகரித்து, மனித உடல் ஆயுளை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது. அத்தகைய நுரையீரலில் நெடுநாட்களாக சளி தேங்கி, நுரையீரல் பாதிப்படைவதாலேயே, ஆஸ்துமா, இருமல் உள்ளிட்ட சுவாச பாதிப்புகள் ஏற்பட்டு, உடல் நலம் கெடுகின்றன. அத்தகைய பாதிப்புகளை நீக்கி, நுரையீரலில் தேங்கியுள்ள சளியை அகற்றி, சுவாசத்திற்கு உறுதுணை புரிந்து, நீண்ட ஆயுளை அடையவைக்கும் அற்புத மூலிகை, இந்த ஆடாதோடை மூலிகை."ஆடாத உடலும் ஆடும், பாடாத வாயும் பாடும்" எனும் சித்தர்களின் வாக்குக்கேற்ப, ஆடாதோடை மூலிகையை முறையாக, உண்டுவர, உடல் நலம் தேறி, மனதில் உற்சாகம் பிறக்கும்.பொதுவான மருத்துவ குணங்களாக, கோழை எனும் சளியை அகற்றும், வயிற்றில் உள்ள நுண்ணிய புழுக்களை அழிக்கும், சிறுநீரை அதிகரித்து, உடல் வழிகளை போக்கும் தன்மைகள் மிக்கது.ஆடாதோடையில் உள்ள முக்கிய சத்தான வாசிசின், நுரையீரலில் உள்ள செல்களை சரிசெய்து, நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மையை சீராக்குவதால், ஆஸ்துமா, இருமல் சளி போன்ற சுவாசக்கோளாறுகளை சரியாக்குகிறது.மேலும், ஆடாதொடையில் வைட்டமின் C சத்தும், வாசினால், ஆடாதோடின் மற்றும் கேலக்டோஸ் எனும் வேதிப்பொருள்களும் அதிக அளவில் உள்ளன.மார்பு வலிகளுக்கு ஆடாதோடை முதலுதவி:உடலில் அதிக சளித்தொல்லைகள் காரணமாக, உடல் தசைகளில் வலி ஏற்படும், அந்த வலிகளைப் போக்க, ஆடாதோடை இலைகளை பொடியாக்கி, நீரில் கலந்து பருகிவர, தசை வலிகள் யாவும் விலகிவிடும்.எதிர்பாராத விதமாக மார்பில் அடிபட்டு, அந்த வலியால் வேதனையடையும் நேரங்களில், ஒரு ஆடாதோடை இலையுடன் இரண்டு வெற்றிலைகளை மென்று சாப்பிட, உடனடியாக வலி குறையும், இது ஒரு அரிய முதலுதவியாகும்.ஆடாதோடை இலை தரும் அற்புத பலன்கள்ஆடாதோடை இலைகளை நன்கு அலசி, நீரில் காய்ச்சி,மூன்றில் ஒரு பங்காக நீர் சுடும்வரை வைத்திருந்து, பின்னர் தேனுடன் கலந்து பருகிவர, ஜுரம், சளி, இருமல், உடல்வலி மற்றும் ஆஸ்துமா பாதிப்புகளை நீக்கும். இந்த பாதிப்புகள் தீரும்வரை, தினமும் இந்த முறையில் இலைகளை நீரிலிட்டு காய்ச்சி பருகிவரலாம்.ஆடாதோடை இலை, தூதுவளை இலைகளை சம அளவு எடுத்து, உலர்த்தி பொடியாக்கி, தினமும் இருவேளை தேனுடன் கலந்து உண்டுவர, சளி பிரச்னைகள் நீங்கி, நுரையீரல் பாதிப்புகள் யாவும் விலகி, இரத்தத்தை சுத்தம் செய்து, நுரையீரலை வலுவாக்கும்.இதுவே, மனிதனைக்கொல்லும் கொடிய வியாதியாகக்கருதப்படும் எலும்புருக்கி வியாதிக்கு முதல் மருந்தாகும். முறையாக நாற்பத்தெட்டு நாட்கள் பருகிவர, கொடிய பாதிப்புகள் தரும் T.B என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அந்த காச வியாதி விலகிவிடும்.ஆடாதோடை இலைகளுடன்,திப்பிலி,அதிமதுரம்,ஏலக்காய் மற்றும் தாளிசபத்திரி போன்ற மூலிகைகளை கலந்து பருகிவர, நாள்பட்ட இருமல்,இளைப்பு மற்றும் ஜுரம் போன்ற பாதிப்புகள் அகலும்.ஆடாதோடை இலைச்சாற்றை வெறுமனே பருகினால், ஒவ்வாமை அல்லது சூட்டினால் உண்டாகும் வயிற்றுபோக்குகள் குணமாகும்.ஆடாதோடை இலைச்சாற்றை தேனுடன் கலந்து பருகிவர, இரத்த கொதிப்பு, மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் விலகிவிடும்.ஆடாதோடை இலைச்சாற்றுடன் தேன் கலந்து அத்துடன் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி எனும் பனை வெல்லம் சேர்த்து, தினமும் இரண்டு அல்லது மூன்றுவேளை பருகிவர, சுவாசக் கோளாறுகளால் உண்டாகும் இரத்த வாந்தி, நுரையீரலில் சளி மிகுதியால் உண்டாகும் மூச்சுத்திணறல், வறட்டு இருமல் மற்றும் இரத்தம் கலந்து வரும் சளி போன்ற பாதிப்புகள் விரைவில் நீங்கி, உடல் நலம் சீராகும்.இந்த சாற்றை பெரியவர்கள் ஒரு தேக்கரண்டியில் பாதி அளவும், சிறுவர்கள் அதில் பாதி அளவும் பருகிவந்தாலே, வியாதிகள் விலகிவிடும்.ஆடாதோடை இலைகள் இரண்டு, வெற்றிலை இரண்டு ஐந்து மிளகு மற்றும் சிறு துண்டு சுக்கு இவற்றை நீரில் இட்டு காய்ச்சி, குடிநீராக அருந்திவந்தால், கடுமையான சளியால் உண்டான உடல் வலிகள் மற்றும் நெஞ்சு சளி பாதிப்புகள் விரைந்து நீங்கிவிடும்.ஆடாதோடை இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, இருநூறு மிலி காய்ச்சிய பாலில் சேர்த்து பருகிவர, உடல் சூட்டினால் உண்டாகும் பேதி எனும் வயிற்றுப்போக்கு மற்றும் இரத்தம் கலந்த வயிற்று போக்கு குணமாகும்.உடலில் ஏற்பட்ட விஷப்பாதிப்புகள் அகல, விஷம் முறிய, ஆடாதோடை இலைகள், துளசி இலைகள், குப்பைமேனி இலைகள் இவற்றை கைப்பிடி அளவு எடுத்து, ஐந்தில் ஒரு பங்கு அளவு நீராக சுண்டக்காய்ச்சி பருகவேண்டும்.ஆடாதோடை இலைகளை சிவனார் வேம்பு இலைகளுடன் அரைத்து பாதி எலுமிச்சை அளவு உட்கொண்டு பின்னர் சுடுநீர் பருகிவர, உடலின் உள்ளே உள்ள கட்டிகள், தோல் நமைச்சல், சொறி மற்றும் பூச்சிகள் கடிப்பதால் உண்டான விஷங்கள் விலகிவிடும்.ஆடாதோடை இலைகளுடன் வேப்பிலை, அரிவாள்மனைப்பூண்டு இலை, சிரியா நங்கை இலை ஆகியவற்றை சம அளவில் அரைத்து, தோலில் உள்ள புண்கள் மீது இட்டுவர, புண்கள் யாவும் தழும்புகள் இன்றி மறைந்துவிடும்.இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் இடுப்பில் ஏற்படும் புண்களின் பாதிப்புகள் நீங்கி அவற்றின் தழும்புகள் மறைய, ஆடாதோடை இலைகளுடன் குப்பைமேனி இலைகளை கலந்து அரைத்து, இடுப்புப்புண்களின் மீது தடவி வர வேண்டும்.ஆடாதோடை இலைகள், காய்கள் இவற்றை கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, மூன்று டம்ளர் நீரில் ஒரு டம்ளர் நீராக காய்ச்சி, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டுவர, சரும வியாதிகளான படை, ஊறல், விக்கல், வாந்தி வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் குணமாகும்.ஆடாதோடை இலைகளை காயவைத்து சுருட்டி, புகைத்துவர, சுவாச இரைப்பு வியாதிகள் விலகும். அல்லது ஆடாதோடை இலைபொடியை, ஊமத்தை இலையில் இட்டு சுருட்டி புகை பிடித்துவர, மூச்சுத்திணறல் பாதிப்புகள் அகலும்.குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளித்தொல்லைகள் நீங்க :ஆடாதோடை இலைகளை உலர்த்தி பொடியாக்கி, தினமும் தேனில் கலந்து குழந்தைகளைப் பருகவைத்துவர, குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இரைப்பு, சளி இருமல் தொல்லைகளை போக்கும். ஆடாதோடை இலைகளில் உள்ள உயிர்ச்சத்தான பச்சையம் குழநதைகளின் நெஞ்சில் உள்ள சளியைக் கரைத்து, நீடித்த இருமல் தொண்டைக்கட்டு போன்ற பாதிப்புகளை சரிசெய்து, குழநதைகளின் உடல்நலனை மேம்படுத்தும்.இந்த மருந்தை, ஒரு மண்டலம் எனும் அளவு அதாவது நாற்பத்தெட்டு நாட்கள் தினமும் விடாமல் குழந்தைகள் பருகிவரச் செய்தால், குழந்தைகளுக்கு எப்போதும், இருமல் சளி போன்ற சுவாச பாதிப்புகள் அணுகாது.குழந்தைகளுக்கு நெஞ்சு சளியால் ஏற்படும் இரைப்பை உடனே சரிசெய்ய, ஆடாதோடை இலைகளை மையாக அரைத்து, குழந்தைகளின் நெஞ்சில் தடவிவர, நெஞ்சு சளி உடனே கரைந்து, சுவாசம் சீராகும்.ஆடாதோடை வேரின் மருத்துவ பலன்கள்ஆடாதோடை வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து காய்ச்சிய நீரில் திப்பிலி சேர்த்து பருகிவர, வறட்டு இருமல் உள்ளிட்ட அனைத்துவகை இருமலும் ஓடிவிடும்.இந்தக்கலவையை தேனில் கலந்து தினமும் தொடர்ந்து இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர, நரம்பு சுருட்டல், சளியினால் ஏற்படும் ஜன்னிக்காய்ச்சல் சுவாச இழுப்பு தசை வலிகள் போன்றவை குணமாகும்.ஆடாதோடை வேர், ஆடாதோடை பூ இலை இவற்றை பொடியாக்கி, தினமும் பாலில் கலந்து வருகிவர, உடல் சூட்டினால் உண்டாகும் சுவாச பாதிப்புகள் மற்றும் இரைப்பு, இருமல் போன்ற பாதிப்புகள் அகலும்.ஆடாதோடை வேரை கைப்பிடி அளவு எடுத்து, ஐந்து டம்ளர் நீரில் இட்டு, ஒரு டம்ளர் அளவுக்கு நீர் வற்றியதும், நிறைமாத கர்ப்பிணிப்பெண்கள் இரு வேளை பருகிவர, பிரசவம் சுலபமாகி, சுகப்பிரசவமாக குழந்தையைப் பெற்றெடுப்பர்.
அனைத்துவகை காய்ச்சல் நீங்க :ஆடாதோடை இலையுடன், துளசி, கோரைக்கிழங்கு, பற்படாகம், விஷ்ணுகிராந்தி, பேய்ப்புடல், சீந்தல் மற்றும் கஞ்சாங்கோரை போன்ற மூலிகைகளை கைப்பிடி அளவு எடுத்து, ஒரு லிட்டர் நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி, இருநூறு மிலி அளவாக வற்றியதும், அந்த வடிநீரை அரை டம்ளர் அளவு எடுத்து, பருகிவர, அனைத்துவிதமான ஜுரம் எனப்படும் காய்ச்சல்கள் அகலும்.
உடல் வலிகள் நீங்க :உடலில் உண்டாகும் கழுத்துவலி, கை கால் மூட்டு தோள்பட்டை வலி போன்றவை நீங்க, உலர்ந்த ஆடாதோடை இலைகளுடன் மஞ்சள், வசம்பு மற்றும் சுக்கு இவற்றை பொடியாக்கி, தவிட்டுடன் சேர்த்து துணியில் கட்டி, ஒரு சட்டியில் இந்த துணி முடிச்சை வைத்து சூடாக்கி, வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்துவர, வலிகள் நீங்கும்.அதிக சளியால் உண்டாகும் தலைவலி தலை பாரம் நீங்க, ஆடாதோடை இலையுடன் அதன் வேர்ப்பட்டை, கண்டங்கத்திரி சேர்த்து பொடித்து காய்ச்சிய நீரில் தேன் அல்லது கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகிவர, பாதிப்புகள் நீங்கும்.ஆடாதோடை மலரை சட்டியில் இட்டு வதக்கி, கண்களின் மீது வைத்து கட்டிவர, கண்களில் உண்டாகும் வியாதிகள் யாவும் நீங்கிவிடும்.இதுபோல எண்ணற்ற நற்பலன்களை மனிதனுக்கு தரும் ஆடாதோடை ஒரு அற்புத மூலிகை மட்டுமல்ல, மனித உடலுக்கு நீடித்த ஆயுள் தரும், ஒரு காயகற்ப மூலிகையுமாகும்.இருமல், சளி, தொண்டைக்கட்டு தீர பசுமையான ஆடாதோடை இலைகளைச் சேகரித்துக்கொண்டு, நடுநரம்பை நீக்கி, ஒன்றிரண்டாகக் கத்தரித்துக் கைப்பிடியளவு எடுத்துக்கொண்டு, 4 டம்ளர் தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து, ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, வடிகட்டி தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்துவர வேண்டும். தினமும் இரண்டு வேளைகள் இவ்வாறு செய்யலாம்.சளி இல்லாமல் புகைச்சலாக ஏற்படும் வறட்டு இருமல் குணமாக 3 கொழுந்து ஆடாதோடை இலைகளைப் பறித்து, மைய நசுக்கி, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து ½ டம்ளர் அளவாகக் காய்ச்சி காலையில் குடிக்க வேண்டும். இதுபோல 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.காய்ச்சல் குணமாக ஒரு டம்ளர் தண்ணீருக்கு 4 ஆடாதோடை இலைகள் வீதம் எடுத்து நசுக்கிக் கொள்ள வேண்டும். இவற்றைத் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். இந்த ஆடாதோடை இரசத்தை, காலை, மாலை ½ டம்ளர் வீதம் சரியாகும்வரை சாப்பிட வேண்டும். இந்த இரசம் சாப்பிடும் காலத்தில் பத்தியம் கடைபிடிக்க வேண்டும். செரிக்க கடினமான உணவு, குளிர்ந்த உணவு, புளிப்பான உணவு சாப்பிடுதல் கூடாது. பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.ஆஸ்த்துமா, மூச்சுத்திணறல் கட்டுப்பட ஆடாதோடைச் சுருட்டுஆடாதோடை இலைகளைக் காயவைத்து, தூள் செய்து வைத்துக் கொண்டு, இதனை, காய்ந்த ஊமத்தை இலையில் சுருட்டி புகைபிடித்து வர கட்டுப்படும்.ஆடாதோடை இலை, தூதுவளை இலை சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும். சளித் தொல்லை அணுகாது. நுரையீரல் பலம்பெறும்.இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா தோடைக்கு உண்டு.ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும். நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்ஆடாதோடையின் சிறப்புநன்கு பாடக்கூடிய குரல் வளத்தை வழங்கக் கூடியது ஆடாதோடை இலை. ஆடாதோடையின் குணத்தை உரைக்க, ஆடாதோடைக்குப் பாடாத நாவும் பாடும் என்ற சித்தர் வரிகளால் அறியலாம். பாடும் குழந்தைகளுக்கோ, பாடகர்களுக்கோ குரல் கம்மல் இருக்கக்கூடாது. தொண்டைக் கட்டாமல் இருக்க அவர்கள் பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்வார்கள். அவர்கள் ஆடாதோடையை கஷாயமாகவோ, சிரப் ஆகவோ சேர்த்துக் கொண்டால் நல்ல குரல் வளம் பெறுவதோடு தங்கள் தொண்டையை கிருமித் தொற்று ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம்.ஆடாதோடை கஷாயம் தயாரிக்கும் முறைஉலர்த்திய ஆடாதோடைஇலைகள் - 2-3அதிமதுரம் - ஒரு துண்டு, (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)மஞ்சள் - ஒரு துண்டு,நிற வேர் - ஒரு துண்டு (இனிப்பாக இருக்கும். பார்க்க சுக்கு போல் இருக்கும்.)திப்பிலி- இரண்டு,மிளகு - இரண்டுமேலே கூறிய பொருட்களை ஒன்றிரண்டாக சிதைத்து (இடித்து) ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீர் அரை டம்ளர் நீராக வற்றியதும் வடிகட்டி அருந்தலாம். அருந்த வேண்டிய அளவுபெரியவர்கள் என்றால் 25-30 மிலி, குழந்தைகளுக்கு என்றால் 5/15 மிலி, குழந்தைகளுக்குத் தரும் போது தேன் அல்லது வெல்லம் சேர்த்துத் தரலாம். இதன் மூலம் காய்ச்சல், இருமல், மார்புச்சளி ஆகியவை குணமாகும். குருதி அழல் எனப்படும் ரத்த அழுத்தம் இதனை அருந்த நன்மை பயக்கும். வழக்கமாக சாப்பிடும் ரத்த அழுத்த மாத்திரைகளுடன் இதனையும் சேர்த்து அருந்த அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறையும்.ஆடாதோடையின் மணப்பாகுமணப்பாகு என்றால் சிரப் ஆடாதோடை இலைச் சாற்றுடன் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு கொதித்து வாசம் வரும் நேரத்தில் பாகுபதம் பார்த்து இறக்கிய பின், ஆற வைத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.இதனை சளி, இருமல் உள்ளவர்களுக்கு ஒரு டீஸ்பூன் முதல் இரண்டு டீஸ்பூன் வரை எடுத்து ஆறின வெந்நீர் சேர்த்து கலந்து கொடுக்கலாம். இந்த சிரப்பை குழந்தைகளுக்கு 5-10 மிலி வரை கொடுக்கலாம். ஆடாதோடை மணப்பாகு (ரெடிமேட்) சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும்.ஆடாதோடையின் சிறப்புஆடாதோடை கோழை அகற்றுவதோடு, புழுக்கொல்லியாகவும், சிறுநீர்ப்பெருக்கியாகவும் செயல்படும். தற்போது மழைக்காலம். டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்தத்திட்டுக்கள் (ப்ளேட்லெட்ஸ்) குறைந்துவிடும். அவர்கள் நவீன சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் கூடவே இந்த ஆடாதோடை மணப்பாகோ, கஷாயமோ எடுத்துக்கொண்டால் ரத்த திட்டுக்கள் அதிகரிக்கும். டெங்கு நோயாளிகளுக்கு உடலில் பல பாகங்களிலும் ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தத் திட்டுக்கள் அதிகரிக்கும் போது ரத்தக் கசிவு கட்டுப்படும்.இதன் கசப்பு சுவையால் வயிற்றில் உள்ள பூச்சிகள் சாகும். சிறு குழந்தைகள் பூச்சித் தொல்லையால் சரியாக சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு இதனை கொடுத்து வந்தால் வயிற்றில் பூச்சித் தொல்லைகள் நீங்கி நன்கு பசி எடுக்கும். குழந்தையின் ஆரோக்யம் மேம்படும்.இலைகளை வதக்கி மூட்டு வீக்கத்திற்கு சூடு பொறுக்கும் பதத்தில் பற்றிடலாம். ஆடாதோடை இலைச் சாற்றுடன் சிறிதளவு தேன் சேர்த்து அருந்த மூக்கில் இருந்து வடியும் ரத்தம் நிற்கும். இதன் மலர்கள் வெள்ளை நிறமாக பார்க்க அழகாக இருக்கும். இதனை வதக்கி கண்கள் மீது வைத்தால் கண் எரிச்சல் தீரும். பச்சை இலைகளை நிழலில் உலர்த்தி ஒரு காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம்.
Comments
Post a Comment